பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பாத அஜித்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திரக் கலைவிழா 2018 நடைபெற்றது இந்த விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைககள் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது மேலும் லைகா மொபைல் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன.

நட்சத்திர கலைவிழாவை முடித்து, நடிகர்கள் சென்னை திரும்பியுள்ள சூழலில் நடிகர் சங்கத்தின் டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்வி சேகர் ராஜினாமா செய்தார் ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எஸ்வி சேகர் கூறுகையில் நடிகர் சங்க கட்டிடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை மலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அஜித் அதை விரும்பவில்லை.

மக்கள் படம் பார்ப்பதற்காக தியேட்டரில் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் அதன் மூலம்தான் நாம் சம்பாதிக்கிறோம் அதனால் நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகர்களாகிய நாமே நிதி அளிக்கலாம் அதைத் தவிர்த்து ஏன் நட்சத்திரக் கலைவிழா நடத்தி மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என்று அஜித் கேட்டார் என்று எஸ்வி சேகர் தெரிவித்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog

உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை

‘ධනංජය ඉවතට..කුසල් ඇතුළට..’- අලුත්ම ක‍්‍රීඩකයකු සමගින් තුන්කොන් තරගාවලියට නම් කළ ශ‍්‍රී ලංකා සංචිතය මෙන්න

‘හතුරු අයියා වැඩ කරන හැටි මම දන්නවා..සමහරු අකමැති වෙයි’-මැතිව්ස් යළි බර කරට ගනිමින් කියපු ආන්දෝලනාත්මක කතාව මෙන්න